states

img

மத்தியபிரதேசத்தில் கார் மரத்தில் மோதி விபத்து - 3 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் துக்பர் கிராமத்திற்கு அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் ஷாஹ்டோலில் இருந்து கட்னிக்கு காரில்  திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்தவர்களில் இருவர் கன்னு சேகர்(30) மற்றும் ஆஷிஷ் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.